7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பாகுபலி படத்திற்காக அழகான கதையை வடிவைத்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்.. ஆனால் அதேசமயம் தன்னைவிட மிக திறமையாளராக, தனக்கு சரியான போட்டியாளாரக அவர் கருதுவது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறும்போது, “பூரி ஜெகன்நாத்தை எனது எதிரி என்றே சொல்லுவேன். அதனாலேயே அவரது புகைப்படத்தை எனது மொபைல் போனில் வால்பேப்பராக பதிவு செய்து வைத்துள்ளேன்.. காரணம் அதை பார்க்கும்போதெல்லாம் அவரை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்ளத்தான்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்