ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பாகுபலி படத்திற்காக அழகான கதையை வடிவைத்ததன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாசிரியராக மாறிவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத்.. ஆனால் அதேசமயம் தன்னைவிட மிக திறமையாளராக, தனக்கு சரியான போட்டியாளாரக அவர் கருதுவது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி அவர் கூறும்போது, “பூரி ஜெகன்நாத்தை எனது எதிரி என்றே சொல்லுவேன். அதனாலேயே அவரது புகைப்படத்தை எனது மொபைல் போனில் வால்பேப்பராக பதிவு செய்து வைத்துள்ளேன்.. காரணம் அதை பார்க்கும்போதெல்லாம் அவரை விட இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்ளத்தான்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்




