மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்தப்படத்திற்கான கதையையும் விஜய்சேதுபதியிடம் சொல்லி ஒகே வாங்கி விட்டார்களாம். குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கு தருவதாகவும் பேசப்பட்டுள்ளதாம்.




