என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்தப்படத்திற்கான கதையையும் விஜய்சேதுபதியிடம் சொல்லி ஒகே வாங்கி விட்டார்களாம். குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கு தருவதாகவும் பேசப்பட்டுள்ளதாம்.