காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்தப்படத்திற்கான கதையையும் விஜய்சேதுபதியிடம் சொல்லி ஒகே வாங்கி விட்டார்களாம். குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கு தருவதாகவும் பேசப்பட்டுள்ளதாம்.