டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கு பான்-இந்தியா ஹீரோவாக மாற வேண்டும் என்பதுதான் தற்போதைய பெரும் கனவாக உள்ளது. 'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ், பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். அவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளிவர உள்ளன. 'பாகுபலி' படத்தின் பெரும் வெற்றி அவரது இமேஜயும், சம்பளத்தையும் பன் மடங்கு உயர்த்திவிட்டது.
பிரபாஸ் போல தங்களது மார்க்கெட்டும் இந்திய அளவில் உயர வேண்டும், தங்களது சம்பளம் 100 கோடியைக் கடக்க வேண்டும் என்ற பேராசையில் சில ஹீரோக்கள் உள்ளனராம்.
தமிழ் நடிகரான விஜய் தன்னுடைய அடுத்த படங்களை பான்-இந்தியா படங்களாகத்தான் உருவாக்க வேண்டும் என்று சொன்னதாகத் தகவல். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் கூட 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு 'கேஜிஎப்' இயக்குனரான பிரஷாந்த் நீல் உடன் இணைய உள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படமான 'புஷ்பா' படமே பான் இந்தியா படம்தான். அப்படத்திற்குப் பிறகு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். ராம் சரண் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனர் ஷங்கருடன் இணைய உள்ளார்.
தெலுங்கில் ராஜமவுலி, தமிழில் ஷங்கர் கன்னடத்தில் பிரஷாந்த் நீல் ஆகியோர்தான் இப்போதைக்கு பிரம்மாண்ட இயக்குனர்களாக அறியப்பட்டுள்ளார்கள். பல கோடி செலவில் அடுத்து யார் படங்களை இயக்கப் போகிறார்களோ அவர்களும் பிரம்மாண்ட இயக்குனர்களாக மாறிவிடுவார்கள்.




