மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகராக சந்திரமோகன் திரையுலகத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய சந்திரமோகன் பத்திரிகையாளர்களிடம் தனது ஓய்வு முடிவு பற்றி தெரிவித்துள்ளார்.
1966ம் ஆண்டு வெளிவந்த 'ரங்குல ராட்டினா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். அதன்பின் கடந்த 55 வருடங்களாக எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளில் இதுவரையிலும் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளிவந்த 'நாளை நமதே' படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.
கடைசியாக 2017ல் வெளிவந்த 'ஆக்சிஜன்' படத்தில் நடித்தார். நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். இனி, வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.