ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இந்தியன் 2 படம் பல காரணங்களால் திட்டமிட்டபடி முடிவடையாமல் தாமதமாகி வந்ததால், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்க தயாரானார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால் இந்த செய்தி வெளியானதுமே இந்தியன்-2வை முடித்த பிறகுதான வேறு படத்தை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். அதையடுத்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஷங்கர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஷங்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று டோலிவுட், பாலிவுட் பிலிம் சேம்பர்களுக்கும் லைகா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இப்படியான நிலையிலும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியாபட் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.