மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பார்த்திபன் அவ்வப்போது தனது பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் கமெண்டுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்பதை கூறும் வகையில், ‛‛நாளை சிரிக்க சிறக்க இன்றும் உள்ளிருப்போம் உறவே'' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர், ‛உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க?' என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பார்த்திபன், ‛‛சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம். நாளை இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்'' என்று அந்த நபருக்கு நச் பதில் கொடுத்துள்ளார் பார்த்திபன்.