'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் சினிமாத்துறையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இனிமேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திரையுலகினர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், ரஜினிகாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேசும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.