இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தென்னிந்திய நடிகைகளில் தான் அளிக்கும் பேட்டிகளில் மனதில் பட்டதை பளிச் பளிச் என்று சொல்லி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் வெற்றி பெற்று கப்பை தட்டிச் செல்லும் என்று கூறி வந்தீர்கள். அப்படியென்றால் வீராட் கோலியைத்தானே உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு ரசிகர் ராஷ்மிகாவிடத்தில் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனக்கு பெங்களூரு அணி தான் பிடிக்கும். அதேசமயம், வீராட் கோலியை விட தோனி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அணுகுமுறையும் தோனியிடத்தில் மிகவும் பிடித்த விசயங்கள்'' என்றார்.