அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதில் இருந்தே ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அவரது அந்த உதவி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வரும் சோனு சூட், சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்கிற தகவல் தனக்கு கிடைத்ததும் உடனடியாக அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரீமா சுவர்ணா மற்றும் சிகிச்சை கொடுத்த மருத்துவமனை நிர்வாகமும் சரியான நேரத்தில் உதவி செய்து 30 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.