மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது உறுதியாகிவிட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். இன்னமும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வப்போது கமலிடம் மட்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசி வருவதாக தகவல்.
இந்நிலையில், ரஜினி, கமல் இணையும் படமும் தாதாயிசம் பேக்கிரவுண்டில் உருவாக உள்ளது. ரஜினி, கமல் இருவருமே தாதாக்கள். ஆனால், அவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள். பின்னே ஏன் பிரிந்தார்கள். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது கதை என கோலிவுட்டில் ஒரு புதுக்கதை உலா வருகிறது.
ஆனால், படக்குழுவோ இது தவறு. இன்னும் இது போல நுாற்றுக்கணக்கான கதைகள் வரலாம். ரஜினி, கமல் இணையும் படம் என்பதால் யாரும் எதிர்பாராதவகையில் மிரட்டலாக இருக்கும். அதேசமயம், லோகேஷ் பாணியில் வன்முறை, ரத்தம், தாதாயிசம், கடத்தல் விஷயங்களும் இருக்க வாய்ப்பு என்கிறார்கள்.
இதற்கிடையில், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோரும் சினிமாத்துறையில் இருப்பதால், அந்த படத்தில் தங்களின் பங்கு இருக்க வேண்டும். ஏதாவது ஒருவகையில் அந்த படத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். படத்துக்கு இசை அனிருத் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.