கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது உறுதியாகிவிட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். இன்னமும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வப்போது கமலிடம் மட்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசி வருவதாக தகவல்.
இந்நிலையில், ரஜினி, கமல் இணையும் படமும் தாதாயிசம் பேக்கிரவுண்டில் உருவாக உள்ளது. ரஜினி, கமல் இருவருமே தாதாக்கள். ஆனால், அவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள். பின்னே ஏன் பிரிந்தார்கள். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது கதை என கோலிவுட்டில் ஒரு புதுக்கதை உலா வருகிறது.
ஆனால், படக்குழுவோ இது தவறு. இன்னும் இது போல நுாற்றுக்கணக்கான கதைகள் வரலாம். ரஜினி, கமல் இணையும் படம் என்பதால் யாரும் எதிர்பாராதவகையில் மிரட்டலாக இருக்கும். அதேசமயம், லோகேஷ் பாணியில் வன்முறை, ரத்தம், தாதாயிசம், கடத்தல் விஷயங்களும் இருக்க வாய்ப்பு என்கிறார்கள்.
இதற்கிடையில், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோரும் சினிமாத்துறையில் இருப்பதால், அந்த படத்தில் தங்களின் பங்கு இருக்க வேண்டும். ஏதாவது ஒருவகையில் அந்த படத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். படத்துக்கு இசை அனிருத் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.