கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் 1981ல் மே 15ம் தேதி வெளிவந்த 'நியாயம் காவாலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளிவந்து இன்றுடன் 40 வருடங்கள் ஆகிறது.
கோதண்டராமி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் 1984ம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க 'விதி' என்ற பெரியல் ரீமேக்காக பெரும் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய முதல் படமான 'நியாயம் காவாலி' படம் பற்றி ராதிகா இன்று டுவிட்டரில், “என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு பாதையில் மாற்றிய முதல் தெலுங்குப் படம் 'நியாயம் காவாலி'. வாழ்க்கை முழுவதும் நண்பனான சிரஞ்சீவி, கோதண்டராமி ரெட்டி, சாரதா மேடம், தயாரிப்பாளர் கிராந்திகுமார். ஒரு முழு நடிகையாக எப்படி பயணத்தை ஆரம்பிப்பது என்ற விழிப்புணர்வைக் கொடுத்த படம்,” என குறிப்பிட்டுள்ளார்.