விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் 1981ல் மே 15ம் தேதி வெளிவந்த 'நியாயம் காவாலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளிவந்து இன்றுடன் 40 வருடங்கள் ஆகிறது.
கோதண்டராமி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் 1984ம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க 'விதி' என்ற பெரியல் ரீமேக்காக பெரும் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய முதல் படமான 'நியாயம் காவாலி' படம் பற்றி ராதிகா இன்று டுவிட்டரில், “என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு பாதையில் மாற்றிய முதல் தெலுங்குப் படம் 'நியாயம் காவாலி'. வாழ்க்கை முழுவதும் நண்பனான சிரஞ்சீவி, கோதண்டராமி ரெட்டி, சாரதா மேடம், தயாரிப்பாளர் கிராந்திகுமார். ஒரு முழு நடிகையாக எப்படி பயணத்தை ஆரம்பிப்பது என்ற விழிப்புணர்வைக் கொடுத்த படம்,” என குறிப்பிட்டுள்ளார்.