புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்றுடன் அவருடைய 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்தது. இதையடுத்து கொரோனாவை சமாளிக்க 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஆண்ட்ரியா.
1. கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும் பாசிட்டிவ்வாக இருங்கள். பயம் என்பது நெகட்டிவ் எமோஷன், அது அனைத்தையும் மோசமாக்கும். நலமடைவது மட்டுமே குறிக்கோள் என கவனமாக இருங்கள், ஒன்றும் ஆகாது.
2. கோவிட் 19 வைரஸ் மூக்கு, தொண்டை வழி, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும். அதனால், காற்று போகும் பாதையை சுத்தமாக வைத்திருங்கள். ஆவி பிடிப்பது பல மாற்றத்தை ஏற்படுத்தும். மூச்சுப் பயிற்சியை விடாமல் செய்யுங்கள்.
3. நீங்கள் சாப்பிடுவது, குடிப்பதும் மிகவும் முக்கியமானது. நமது தினசரி உணவில் பல சூப்பர் உணவுகள் நமக்கு உள்ளது ஆசீர்வாதமானது. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் தூள் கலந்த பால் ஆகியவை நல்லது. சளியை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர், ஜுஸ் ஆகியவற்றை அடிக்கடி குடியுங்கள்.
4. உங்கள் பால்கனி, மொட்டி மாடி ஆகிய இடங்களில் நல்ல காற்றை தினமும் சுவாசியுங்கள். அப்படியில்லை என்றால் ஜன்னலைத் திறந்து விட்டு நல்ல காற்றை சுவாசியுங்கள்.
5. விட்டமின் சி, பி, ஜின்க் ஆகியைவை நமது எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியவை. அஷ்வகந்தா, துளசி மற்றும் பல இந்திய மூலிகைகள் இருக்கின்றன. ஆனால், அவை நமக்குத் துணையாக இருப்பவை மட்டுமே மருத்துவம் அல்ல. அதனால், உங்கள் டாக்டரை ஆலோசித்து அதற்கேற்றபடி மருத்துவம் பாருங்கள்.
6. நெகட்டிவ் செய்திகளைப் பார்ப்பது, கோவிட் நிலவரம் ஆகியவற்றை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதீர்கள். அழுத்தம் உங்களது எதிர்ப்புக் சக்தியைக் குறைக்கும். புத்தகம் படியுங்கள், உங்களுக்கு விருப்பமான இசையைக் கேளுங்கள், உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன், அன்பானவர்களுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.
7. நீங்கள் தனிமையில் வசிப்பவராக இருந்தால் ஆதரவாக இருக்க மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்களுக்கு உதவி செய்ய பல ஹெல்ப்லைன்கள் உள்ளன.
8. உங்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, பணியாட்கள், டிரைவர்கள், வாட்ச்மேசன் ஆகியோரையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு ஜுரம் வந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள வைப்பது உங்கள் பொறுப்பு.
9. காத்திருக்க வேண்டாம், அதுவே மிகவும் தாமதமானது. உங்களது அறிகுறிகள் மோசமடைந்தாலோ, ஆக்சிஜன் லெவல் குறைந்தாலோ டாக்டரை உடனே தொடர்பு கொள்ளுங்கள். உதவி கிடைக்கும் வரை உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளுங்கள்.
10. கோவிட் 19 ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வந்தால் அது உங்களின் தவறு அல்ல. சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் உங்களையோ மற்றவர்களையோ தவறாகப் பேச வேண்டாம். கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களை கனிவாக அணுகுங்கள். இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.
என பத்து ஆலோசனைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, “நான் குறிப்பிட்டிருப்பது மிகவும் குறைவான விதத்தில் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்குத்தான். இதை டாக்டர்களுடன் உறுதி செய்த பிறகே உங்களுக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளேன்.
நான் வீட்டிலேயே குணமடைந்துவிட்டேன். கோவிட்டால் பாதிக்கப்படும் பல இளம் வயதினருக்காக எனது இதயம் துடிக்கிறது. இதிலிருந்து வெளியே வர வேண்டுமென்றால் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான், உடனடியயாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதுதான் சிறந்த வழி,” என தன்னுடைய அனுபவத்தைப் பதிவாக இட்டுள்ளார்.
வேறு எந்த ஒரு நடிகையும் இந்த அளவிற்கு தைரியம் தரக் கூடிய ஒரு பதிவையும் இடவில்லை. அந்த விதத்தில் ஆண்ட்ரியாவைப் பாராட்ட வேண்டும்.