மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இந்திப்பட சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன் இந்தி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு தனுஷ் காயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார். தற்போது உடல் நிலை பூரண குணமாகியுள்ளது. இதையடுத்து மரியான் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். பரத்பாலா இயக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது நாகர்கோவிலில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இதுகுறித்து தனுஷ் அளித்துள்ள பேட்டியில், முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் மரியான் படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.