''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
உலக அளவில் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செப்'. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்க் ரோட்டம் என்பவரது எண்ணத்தில் உருவான நிகழ்ச்சி இது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, பின்னர் 2005ம் ஆண்டு சில மாற்றங்களுடன் பிபிசி டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு முன்னணி டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே இதே டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது போல 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.