காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம் 'நந்தன்'. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை பேசியது. விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வசூல் சுமாராகத்தான் இருந்தது.
இந்நிலையில் 'நந்தன்' படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் இரா.சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ள அவர், 'முழுக்க முழுக்க 'நந்தன்' படத்தை பற்றி பேசினோம். 'நந்தன் 2' படத்தை உருவாக்க மூவரும் தயாராக இருக்கிறோம். விரைவில் நல்ல செய்தி வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இரா சரவணன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் "இரா சரவணன் என் உயிர் நண்பன் எனது கஷ்ட காலங்களில் துணை நின்றவர் அவருக்காக உயிரையே கொடுப்பேன். படம் கொடுக்க மாட்டேனா" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.




