ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவருடைய அடுத்த படம் பற்றிய விவாதத்தில் தற்போது இருந்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்களுக்கு வந்துவிட்டார்கள். இருந்தாலும் சிலர் இன்னும் அந்தப் பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
தற்போது புதிய வரவாக இயக்குனர் பாலா டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார். அவருடைய முதல் டுவீட்டாக முதல்வரைப் பாராட்டி கடிதம் எழுதி அதன் மூலம் டுவிட்டரில் தன் முதல் பதிவை இட்டிருக்கிறார்.
“தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிப்பதைத் தவிருங்கள்,' என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம், நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோனோக்கி வாழுங் குடி,” என்ற குறளுடன் தன் பாராட்டு மடலைப் பதிவிட்டிருக்கிறார்.




