300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியாவும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சற்றுமுன் அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.
“கடந்த வாரம் எனக்கு கொரானோ பாதிப்பு பாசிட்டிவ வந்தது. என்னை கவனமாகப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இன்னமும் நான் வீட்டில் தனிமைப்படுத்துதலில் தான் இருக்கிறேன். ஆனால், குணமடைந்து வருகிறேன்.
சமூக ஊடகங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். எனக்கு ஓரளவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், இது போன்ற நெருக்கடியான நேரத்தில் நமது நாடும் இருக்கும் போது என்ன பதிவிடுவது. வழக்கம் போல என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனது இதயத்திலிருந்து பாடுகிறேன், அது எல்லாவற்றையும் சொல்லும் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், உங்களின் மறுபக்கத்தைப் பார்க்கிறேன்,” என அவரே பாடி பியானோ வாசிக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.