ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறார். அதோடு இந்த வார இறுதியில் வெளியே வரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தனது சார்பில் ஒரு பதில் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அதில், தற்போது எனது கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ் ஆகிய படங்கள் உள்ளன. விஜய் 65ஆவது படத்தில் நடிக்கிறேன்.
அதனால் இப்போதைக்கு எனது முழுக்கவனமும் கைவசமுள்ள இந்த படங்களில் தான் உள்ளது. கொரோனா தொற்றுக்குப்பிறகு இந்த படங்களில் நடிப்பதில் முழுக்கவனமும் செலுத்தப்போகிறேன். அதன்பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன். கைவசமுள்ள படங்களை முடித்த பிறகுதான் புதிய படங்களுக்கு கால்சீட் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.