என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேம்நாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். மேலும் கொரோனா தொற்றுக்கும் ஆளாகி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் பேசவேண்டும் என்பதை தனது கடைசி ஆசையாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி இருந்தார் ஹேம்நாத்.
இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவுக்கு எட்டியதும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக, அந்த ரசிகர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருடன் வீடியோ காலில் பேசினார். அவர் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறும்போது, “உன்னோடு பேசியதும் உன் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது.. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஹேம்நாத்” என கூறியுள்ளார்..