போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? |
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக போய்க் கொண்டே இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி வருகிறார்கள். சிலர் மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவின் நிலையைக் கண்டு இதைச் சொல்ல நினைக்கிறேன், என இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
உலகம் குழப்பத்தில் உள்ளது, ஒட்டுமொத்த மனித இதயமும் வேதனையில் இருக்கிறது. உங்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கும், பிரகாசமாக பிரகாசிப்பதற்கும், அன்பைப் பரப்புவதற்கும், மிகவும் கடினமாக உழைக்க இதுதான் சிறந்த நேரம்.
செயலற்ற, ஆக்கிரமிப்பு நடத்தைகள், மறுப்புகள் மீண்டும் மீண்டும் அழிக்கும் வடிவங்கள். அவற்றிற்கு எப்போதும் உதவாதீர்கள். நல்ல சிந்தனை செய்யுங்கள், நல்லவற்றிற்காக நல்லதாக இருங்கள், நல்லதே இருண்ட மேகங்களை ஊடுருவிச் செல்லும்.
இதைச் சொல்ல வேண்டுமென நினைத்தேன், உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி, மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்,” என பதிவிட்டுள்ளார்.