ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக போய்க் கொண்டே இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி வருகிறார்கள். சிலர் மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவின் நிலையைக் கண்டு இதைச் சொல்ல நினைக்கிறேன், என இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
உலகம் குழப்பத்தில் உள்ளது, ஒட்டுமொத்த மனித இதயமும் வேதனையில் இருக்கிறது. உங்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கும், பிரகாசமாக பிரகாசிப்பதற்கும், அன்பைப் பரப்புவதற்கும், மிகவும் கடினமாக உழைக்க இதுதான் சிறந்த நேரம்.
செயலற்ற, ஆக்கிரமிப்பு நடத்தைகள், மறுப்புகள் மீண்டும் மீண்டும் அழிக்கும் வடிவங்கள். அவற்றிற்கு எப்போதும் உதவாதீர்கள். நல்ல சிந்தனை செய்யுங்கள், நல்லவற்றிற்காக நல்லதாக இருங்கள், நல்லதே இருண்ட மேகங்களை ஊடுருவிச் செல்லும்.
இதைச் சொல்ல வேண்டுமென நினைத்தேன், உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி, மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்,” என பதிவிட்டுள்ளார்.