அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக போய்க் கொண்டே இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி வருகிறார்கள். சிலர் மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவின் நிலையைக் கண்டு இதைச் சொல்ல நினைக்கிறேன், என இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
உலகம் குழப்பத்தில் உள்ளது, ஒட்டுமொத்த மனித இதயமும் வேதனையில் இருக்கிறது. உங்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கும், பிரகாசமாக பிரகாசிப்பதற்கும், அன்பைப் பரப்புவதற்கும், மிகவும் கடினமாக உழைக்க இதுதான் சிறந்த நேரம்.
செயலற்ற, ஆக்கிரமிப்பு நடத்தைகள், மறுப்புகள் மீண்டும் மீண்டும் அழிக்கும் வடிவங்கள். அவற்றிற்கு எப்போதும் உதவாதீர்கள். நல்ல சிந்தனை செய்யுங்கள், நல்லவற்றிற்காக நல்லதாக இருங்கள், நல்லதே இருண்ட மேகங்களை ஊடுருவிச் செல்லும்.
இதைச் சொல்ல வேண்டுமென நினைத்தேன், உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி, மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்,” என பதிவிட்டுள்ளார்.