சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக போய்க் கொண்டே இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி வருகிறார்கள். சிலர் மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவின் நிலையைக் கண்டு இதைச் சொல்ல நினைக்கிறேன், என இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
உலகம் குழப்பத்தில் உள்ளது, ஒட்டுமொத்த மனித இதயமும் வேதனையில் இருக்கிறது. உங்கள் ஒளியைக் கண்டுபிடிப்பதற்கும், பிரகாசமாக பிரகாசிப்பதற்கும், அன்பைப் பரப்புவதற்கும், மிகவும் கடினமாக உழைக்க இதுதான் சிறந்த நேரம்.
செயலற்ற, ஆக்கிரமிப்பு நடத்தைகள், மறுப்புகள் மீண்டும் மீண்டும் அழிக்கும் வடிவங்கள். அவற்றிற்கு எப்போதும் உதவாதீர்கள். நல்ல சிந்தனை செய்யுங்கள், நல்லவற்றிற்காக நல்லதாக இருங்கள், நல்லதே இருண்ட மேகங்களை ஊடுருவிச் செல்லும்.
இதைச் சொல்ல வேண்டுமென நினைத்தேன், உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி, மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்,” என பதிவிட்டுள்ளார்.