விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷாடா. தனுஷுடன் இணைந்து பட்டாஸ் என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தமிழ் திரையுலகம் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதால், தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வரும் மெஹ்ரீன், அங்கே வெங்கடேஷுக்கு ஜோடியாக எப்-3 என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மெஹ்ரீனுக்கும் ஜெய்ப்பூர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் பாவ்யா பிஷ்னோஷ் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாவ்யாவின் காதலை தான் எப்போது எந்தவிதமாக ஏற்றுகொண்டேன் என்பது குறித்து தற்போது மெஹ்ரீன் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாவ்யா பிஷ்னோஷின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்தமான் சென்றார் மெஹ்ரீன். அப்போது கடலில் ஸ்கூபா டைவிங் அடிக்க ஆசைப்பட்டு கடலில் குதித்துள்ளார் மெஹ்ரீன். அதற்கு முன்னதாகவே தனது காதலை சொல்லும் ஏற்பாட்டுடன் தயாராக வந்திருந்த பாவ்யாவும் மெஹ்ரீனை தொடர்ந்து கடலில் குதித்துள்ளார்.
அங்கு தண்ணீருக்கு அடியில் மண்டியிட்டபடி 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று எழுதப்பட்ட பதாகையை மெஹ்ரீனிடம் காட்ட சந்தோஷத்தில் அதிர்ந்துபோன மெஹ்ரீன் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே தண்ணீருக்குள்ளேயே மெஹ்ரீனின் விரலில் மோதிரம் அணிவித்து தனது காதலை உறுதி செய்தாராம் பாவ்யா பிஷ்னோஷ்.