மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ஹிப் ஹாப் தமிழா ஆதி சினிமாவை தவிர வேறு சில சமூக பணிகளையும் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவரது பங்கு முக்கியமாக இருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பங்களை வெளியிட்டார். தற்போது தமிழ்நாடு தீயணைப்புத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த துறை பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி உள்ளார். அதற்கு தீவீரன் என்று டைட்டில் வைத்துள்ளார்.
3 ஆண்டுகளாக ஆய்வு செய்து, உழைத்து இதனை உருவாக்கி உள்ளார். தீயணைப்புத் துறை வீரர்களின் தியாகம், அவர்களின் பணி முறை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த டாக்குமெண்டரியில் இடம் பெற்றுள்ளது. தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகளின் பேட்டி, தீயணைப்பின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களின் நிலை போன்றவையும் இந்த டாக்குமெண்டரியில் இடம்பெற்றுள்ளது. இதனை இசை அமைத்து இயக்கி உள்ளார் ஆதி. அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த டாக்குமெண்டரி யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.