கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ஹிப் ஹாப் தமிழா ஆதி சினிமாவை தவிர வேறு சில சமூக பணிகளையும் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவரது பங்கு முக்கியமாக இருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பங்களை வெளியிட்டார். தற்போது தமிழ்நாடு தீயணைப்புத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த துறை பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி உள்ளார். அதற்கு தீவீரன் என்று டைட்டில் வைத்துள்ளார்.
3 ஆண்டுகளாக ஆய்வு செய்து, உழைத்து இதனை உருவாக்கி உள்ளார். தீயணைப்புத் துறை வீரர்களின் தியாகம், அவர்களின் பணி முறை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த டாக்குமெண்டரியில் இடம் பெற்றுள்ளது. தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகளின் பேட்டி, தீயணைப்பின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களின் நிலை போன்றவையும் இந்த டாக்குமெண்டரியில் இடம்பெற்றுள்ளது. இதனை இசை அமைத்து இயக்கி உள்ளார் ஆதி. அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த டாக்குமெண்டரி யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.