ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ஹிப் ஹாப் தமிழா ஆதி சினிமாவை தவிர வேறு சில சமூக பணிகளையும் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவரது பங்கு முக்கியமாக இருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான ஆல்பங்களை வெளியிட்டார். தற்போது தமிழ்நாடு தீயணைப்புத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த துறை பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி உள்ளார். அதற்கு தீவீரன் என்று டைட்டில் வைத்துள்ளார்.
3 ஆண்டுகளாக ஆய்வு செய்து, உழைத்து இதனை உருவாக்கி உள்ளார். தீயணைப்புத் துறை வீரர்களின் தியாகம், அவர்களின் பணி முறை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த டாக்குமெண்டரியில் இடம் பெற்றுள்ளது. தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகளின் பேட்டி, தீயணைப்பின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களின் நிலை போன்றவையும் இந்த டாக்குமெண்டரியில் இடம்பெற்றுள்ளது. இதனை இசை அமைத்து இயக்கி உள்ளார் ஆதி. அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த டாக்குமெண்டரி யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.