ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக கோலேச்சி வருபவர் மோகன்லால். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என இதுவரை தன்னை வெளிப்படுத்தி வந்துள்ள மோகன்லால் முதன்முதலாக பாரோஸ்-கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷ்ஷர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா மட்டுமின்றி கோவா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளிலும் நடத்துகிறார் மோகன்லால். தற்போது கொரோனா தொற்று நேரத்திலும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பாரோஸ் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படமொன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதிய கார்டியன் ஆப் டி காமாஸ் டிரெஷ்ஷர் என்ற நாவலை தழுவி மோகன்லால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.