ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக கோலேச்சி வருபவர் மோகன்லால். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என இதுவரை தன்னை வெளிப்படுத்தி வந்துள்ள மோகன்லால் முதன்முதலாக பாரோஸ்-கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷ்ஷர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா மட்டுமின்றி கோவா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளிலும் நடத்துகிறார் மோகன்லால். தற்போது கொரோனா தொற்று நேரத்திலும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பாரோஸ் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படமொன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதிய கார்டியன் ஆப் டி காமாஸ் டிரெஷ்ஷர் என்ற நாவலை தழுவி மோகன்லால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.