ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக கோலேச்சி வருபவர் மோகன்லால். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என இதுவரை தன்னை வெளிப்படுத்தி வந்துள்ள மோகன்லால் முதன்முதலாக பாரோஸ்-கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷ்ஷர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா மட்டுமின்றி கோவா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளிலும் நடத்துகிறார் மோகன்லால். தற்போது கொரோனா தொற்று நேரத்திலும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பாரோஸ் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படமொன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதிய கார்டியன் ஆப் டி காமாஸ் டிரெஷ்ஷர் என்ற நாவலை தழுவி மோகன்லால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.