கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக கோலேச்சி வருபவர் மோகன்லால். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என இதுவரை தன்னை வெளிப்படுத்தி வந்துள்ள மோகன்லால் முதன்முதலாக பாரோஸ்-கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷ்ஷர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா மட்டுமின்றி கோவா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளிலும் நடத்துகிறார் மோகன்லால். தற்போது கொரோனா தொற்று நேரத்திலும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பாரோஸ் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படமொன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதிய கார்டியன் ஆப் டி காமாஸ் டிரெஷ்ஷர் என்ற நாவலை தழுவி மோகன்லால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.