பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மும்பையில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன், படப்பிடிப்புகளுக்காக மட்டுமே சென்னை, ஐதராபாத்துக்கு வந்து செல்கிறார். தமிழில் லாபம் படத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில் கிராக், வக்கீல்சாப் படங்களுக்கு பிறகு பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இத்தாலி நடிகரும், மாடலுமான மைக்கேல் கோர்சலை பிரிந்த பிறகு சில மாதங்கள் தனிமையில் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார். அவரது படங்களையும் தவறாமல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசன், தனது பிறந்த நாளில் அவர் தன்னை ஆரத்தழுவி வாழ்த்திய போட்டோக்களையும் வெளியிட்டார்.
இந்தநிலையில் தற்போது மும்பையில் ஊரடங்கு என்பதால், சாந்தனு மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் தான் பொழுதை கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது காதலனும், செல்ல நாய்க்குட்டியும் இந்த கடினமான காலங்களில் ஆறுதலளிக்கும் நண்பர்களாக இருப்பதாக சொல்லி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.