'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
சலார் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நடிகர் பிரபாஸ், தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கிறார். ராமாயணத்தை தழுவி பன்மொழில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் இப்படத்தின் ரிலீசும் தாமதமாகும் நிலை உருவாகியிருக்கிறது.
இதனிடைய இப்படத்திற்கு முன்பாக நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் பிரபாஸ் . ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நாயகியாக அறிவிக்கப்பட்டார். இது சயின்ஸ் பிக்ஷன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட செட் போடப்பட்டு ஒரு வருடம் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்த படத்தை விட அதற்கு அடுத்து கமிட்டான சலார், ஆதிபுருஷ் படங்களுக்கு பிரபாஸ் முக்கியத்துவம் கொடுத்தார் பிரபாஸ். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பிரச்னை நிலவுவதால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதனிடையே இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாயகியாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இப்படத்தையும் பான் இந்திய படமாக உருவாக்குகின்றனர். அதனால் தான் ஹிந்தி பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைக்கின்றனர்.