டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட், முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஆலியா பட் தற்போது 'கங்குபாய் கத்தியவாடி', 'டக்த்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார்.
காதல் ஜோடிகளான ரன்பீர், ஆலியா முதல் முறையாக 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் இணைந்து நடிக்கின்றார்கள். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டதாம். ஆனால், கொரோனா தாக்கத்தால் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னதாக ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இருவரும் உடல் நலம் தேறி அவர்களது சோதனை நெகட்டிவ் என வந்ததால் சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பிறகு தற்போது மாலத்தீவில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.