‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட், முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஆலியா பட் தற்போது 'கங்குபாய் கத்தியவாடி', 'டக்த்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார்.
காதல் ஜோடிகளான ரன்பீர், ஆலியா முதல் முறையாக 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் இணைந்து நடிக்கின்றார்கள். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டதாம். ஆனால், கொரோனா தாக்கத்தால் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னதாக ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இருவரும் உடல் நலம் தேறி அவர்களது சோதனை நெகட்டிவ் என வந்ததால் சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பிறகு தற்போது மாலத்தீவில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.