ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட், முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஆலியா பட் தற்போது 'கங்குபாய் கத்தியவாடி', 'டக்த்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார்.
காதல் ஜோடிகளான ரன்பீர், ஆலியா முதல் முறையாக 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் இணைந்து நடிக்கின்றார்கள். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டதாம். ஆனால், கொரோனா தாக்கத்தால் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னதாக ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இருவரும் உடல் நலம் தேறி அவர்களது சோதனை நெகட்டிவ் என வந்ததால் சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பிறகு தற்போது மாலத்தீவில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.