32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சலார் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நடிகர் பிரபாஸ், தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கிறார். ராமாயணத்தை தழுவி பன்மொழில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் இப்படத்தின் ரிலீசும் தாமதமாகும் நிலை உருவாகியிருக்கிறது.
இதனிடைய இப்படத்திற்கு முன்பாக நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் பிரபாஸ் . ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நாயகியாக அறிவிக்கப்பட்டார். இது சயின்ஸ் பிக்ஷன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட செட் போடப்பட்டு ஒரு வருடம் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்த படத்தை விட அதற்கு அடுத்து கமிட்டான சலார், ஆதிபுருஷ் படங்களுக்கு பிரபாஸ் முக்கியத்துவம் கொடுத்தார் பிரபாஸ். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பிரச்னை நிலவுவதால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதனிடையே இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாயகியாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இப்படத்தையும் பான் இந்திய படமாக உருவாக்குகின்றனர். அதனால் தான் ஹிந்தி பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைக்கின்றனர்.