புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா பிரச்னை துவங்கியபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு பஸ், ரயில், ஏன் விமானங்களில் கூட அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உதவி செய்து வந்தார். சிலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். விவசாய செய்ய ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். நிறைய பேருக்கு படிக்க செல்போன் வாங்கி தந்தார். இப்படி ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இப்போது நடிகர் சோனு சூட்டும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில் அவர் கூறுகையில், "கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் எனது மன நிலை அதை விட உறுதியாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார் சோனு சூட்.