'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
தமிழ்த் திரையுலகத்தில் சிலரது மறைவு தான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. சினிமாவில் எத்தனையோ பேர் வரலாம், போகலாம் ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க முடிகிறது. அந்த விதத்தில் மக்களின் மனங்களை வென்ற மூவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரணம் அடைந்தது தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பாகும்.
2019ம் ஆண்டில் வசனகர்த்தா, நடிகர், நாடகக் கலைஞர் கிரேஸிமோகன், 2020ம் ஆண்டில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம், இந்த 2021ம் ஆண்டில் நடிகர் விவேக் ஆகியோரது மறைவு சினிமாவை விரும்பிச் சென்றுப் பார்க்கும் ரசிகர்களையும், சினிமாவை நேசிக்கும் பல குடும்பத்தினரையும் வருத்தப்பட வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அவர்களது மறைவுக்காக பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் பதிவுகளைப் பதிவிடுவதே அதற்கு சாட்சி.