மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடந்த 2002ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான கம்பெனி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக மாறினார். இதே கம்பெனி படத்தில் நடித்ததன் மூலம் தான் நடிகர் மோகன்லாலும் முதல் முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து 2019ல் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி லூசிபர் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க அதில் வில்லனாக நடித்திருந்தார் விவேக் ஓபராய். இந்த படம் தான் இவருக்கு மலையாள திரை உலகில் முதல் படமாக அமைந்தது.
முதல் பாகத்தில் இவரது கதாபாத்திரம் இறந்து விடுவதால், விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் இவருக்கு வேலை இல்லை. அதே சமயம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், லூசிபர் படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “மோகன்லால் என்னை அழைத்து பாலிவுட்டில் நீங்கள் அறிமுகமான முதல் படத்தில் என்னுடன் இணைந்து நடித்தீர்கள். அதேபோல மலையாளத்திலும் என்னுடைய படத்தில்தான் நீங்கள் அறிமுகமாக வேண்டும். பிரித்விராஜ் இயக்குகின்ற இந்த படத்தில் உங்களுக்கு அற்புதமான கதாபாத்திரம் இருக்கிறது என்று எனக்கு ஒரு அன்புக்கட்டளையே போட்டுவிட்டார். அதை என்னால் மீற முடியவில்லை..
ஆனால் அந்த படம் வெளியான பிறகு தற்போது பல ஊர்களுக்கு செல்லும்போதும் என்னை அந்த படத்தில் நடித்த பேபி கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி தான் அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் மலையாளிகள் என்பதை புரிந்து கொண்டு, உடனே அவர்களிடம் எந்தா சுகந்தன்னே என்று மலையாளத்தில் கேட்டு சந்தோஷப்பட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.