ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ராதாரவிக்கும்-பாடகி சின்மயிக்கும் நீண்டகாலமாகவே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, வைரமுத்துவை மீடூ சர்ச்சையில் சின்மயி கொண்டு வதந்தபோது தொடங்கிய இந்த சர்ச்சை காரணமாக சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார் ராதாரவி. அதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா-உதயநிதி குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசியிருப்பதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட் போட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இந்த மனிதராலும், அவரது பேச்சாலும் நான் ரொம்பவே டயர்டு ஆகி விட்டேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. வெளிப்படையாகவே ஆபாசமாக பேசும் இவரை ஒரு கட்சி எப்படி நட்சத்திர பேச்சாளராக நியமித்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.