சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பின்னனிப் பாடகி சின்மயி உள்ளிடோர் மேடையில் பாடினார்கள்.
படத்தில் பிரபல பாடகியான தீ பாடிய 'முத்த மழை' என்ற பாடலை சின்மயி பாடினார். அன்றைய தினம் பாடகி தீ வர முடியாத காரணத்தால் சின்மயியைப் பாட வைத்துள்ளார்கள். அப்பாடலை தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சின்மயி தான் பாடியுள்ளார்.
இசை வெளியீட்டின் போது மேடை நிகழ்ச்சியில் சின்மயி பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அவர் பாடியதும் நன்றாக இருக்கிறது, அவரையே பாட வைத்திருக்கலாமே என்ற ரீதியில் கமெண்ட்கள் வந்தது. தமிழில் ஒரிஜனலாகப் பாடிய தீ-யை குறைத்து மதிப்பிடுவது போலவும் ஒப்பிட்ட பல கமெண்ட்கள் வந்தன. தமிழில் பாடலைப் பாடுவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது.
இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சை தேவையற்று உருவாக்கப்படுவதாக மணிரத்னம் கோபப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, கர்நாடகாவில் கமல் பேசிய பேச்சால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சர்ச்சையையும் எதற்கு என அவர் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.