ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி. அதோடு, மீ டூ விவகாரத்தில் அவர் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது பேஸ்புக்கில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கடந்த சில ஆண்டுகளாகவே நான் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். அதனால் அவமானங்கள், துன்புறுத்தல்கள், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டவள் என பல விமர்சனங்களை எதிர் கொண்டேன். அது எல்லாவற்றையுமே கடவுளிடத்திலேயே அர்ப்பணிக்கிறேன். குறிப்பாக தற்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்து வருபவர்களுக்கான ஆதரவுகளையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளும், கர்மாவும் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கட்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பி பிழைத்த அனைவரும் இப்போது எனக்கு கிடைக்கும் ஆதரவை பெறட்டும். உண்மை வெல்லட்டும்' என்று அந்த பதிவில் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.




