பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாடகி சின்மயி. அதோடு, மீ டூ விவகாரத்தில் அவர் வெளியிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது பேஸ்புக்கில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கடந்த சில ஆண்டுகளாகவே நான் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். அதனால் அவமானங்கள், துன்புறுத்தல்கள், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டவள் என பல விமர்சனங்களை எதிர் கொண்டேன். அது எல்லாவற்றையுமே கடவுளிடத்திலேயே அர்ப்பணிக்கிறேன். குறிப்பாக தற்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும், பாலியல் வன்கொடுமை செய்து வருபவர்களுக்கான ஆதரவுகளையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். கடவுளும், கர்மாவும் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கட்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பி பிழைத்த அனைவரும் இப்போது எனக்கு கிடைக்கும் ஆதரவை பெறட்டும். உண்மை வெல்லட்டும்' என்று அந்த பதிவில் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.