பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! | வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி | சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா காதலில் விழாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பாலிவுட் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதுடன் அதுகுறித்த சமந்தாவின் கமெண்டுகள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் 'இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோபமாக பதிவிட்டார்.
தற்போது மற்றொரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் ரசிகர்கள் 'இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடதீர்கள்' என்று சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இன்னொரு புறம் 'உங்கள் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்' என்று ஷியாமலியையும் கேட் வருகிறார்கள்.