ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா காதலில் விழாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பாலிவுட் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதுடன் அதுகுறித்த சமந்தாவின் கமெண்டுகள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் 'இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோபமாக பதிவிட்டார்.
தற்போது மற்றொரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் ரசிகர்கள் 'இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடதீர்கள்' என்று சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இன்னொரு புறம் 'உங்கள் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்' என்று ஷியாமலியையும் கேட் வருகிறார்கள்.




