பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் தயாராகி, தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'கேஜிஎஃப் சாப்டர் 1'. யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தில் இந்த படத்தின் கதையை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பில்டப்புடன் சொல்பவராக நடித்திருந்த நடிகர் அனந்த் நாக் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்றுதான் ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்ததால், அதை ஏற்க மறுத்து, அனந்த் நாக் விலகிவிட்டார் என்றும், அவருக்கு பதிலாகத்தான் அந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் அவரது கதாபாத்திர பெயரை வெளியிட்டு, அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தனர் படக்குழுவினர். படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பெயர் விஜயேந்திர இங்கல்ஜி. இந்த தகவல் மூலம் ஒரு மிகப்பெரிய சந்தேகம் தற்போது விலகியுள்ளது என்றே சொல்லப்படுகிறது.
அதாவது முதல் பாகத்தில் அனந்த் நாக் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஆனந்த் இங்கல்ஜி.. அதுமட்டுமல்ல பிரகாஷ்ராஜ் தற்போது நடிப்பது வக்கீல் கதாபாத்திரத்தில்.. ஆனால் அனந்த் நாக் நடித்திருந்தது ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில். அதனால் இந்தப்படத்தில் அனந்த் நாக்கும் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கான பெயர் ஒற்றுமையில் ஏதேனும் ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..