‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

இயற்கை சார்ந்த படங்களை எடுத்து தன்னைத் தமிழ் சினிமாவில் பேச வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். 'மைனா, கும்கி' ஆகிய படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிலும் குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 'கயல்' படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள 'காடன்' படம் தமிழ், தெலுங்கில் நாளை மறுதினம் 26ம் தேதி வெளியாக உள்ளது.
'மைனா, கும்கி' இரண்டு படங்களுமே காடு சார்ந்த படங்கள். அந்த வரிசையில் இந்த 'காடன்' படமும் காடு சார்ந்த படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றியை இருவருமே மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அது போலவே பிரபு சாலமனுக்கும் இது முக்கியமான படம்தான். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கயல், தொடரி' ஆகிய இரண்டு படங்களுமே தோல்விப் படங்கள் தான்.
இந்த 'காடன்' வெற்றி அவர்கள் மூவருக்குமே முக்கியமான ஒன்று.