படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தேசிய விருது பெற வேண்டும் என்பது இந்தியத் திரையுலகில் இருக்கும் பலருக்கும் ஒரு கனவாக இருக்கும். ஆனால், அந்த விருதும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. ஒரு சிலருக்கு மட்டுமே விருதுகள் இரண்டு முறைக்கு மேல் கிடைத்திருக்கின்றன. ஆனால், 20 வருட இடைவெளியில் மீண்டும் கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய நிகழ்வு தான். அந்த ஆச்சரியத்திற்கச் சொந்தக்காரர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.
அவர் முதன் முதலாக இயக்கி நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த 'புதிய பாதை' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதற்குப்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து பார்த்திபன் இயக்கி நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'ஹவுஸ்புல்' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
அடுத்து இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தேசிய விருதைப் பெற்றுள்ளார் பார்த்திபன். 2019ம் ஆண்டு அவரது இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு சிறப்பு மென்ஷன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு வருட இடைவெளியில் இந்தியத் திரையுலகில் வேறு யாராவது தேசிய விருதை வென்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.