மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. கடந்த 1979-ஆம் ஆண்டு 'வெள்ளி ரதம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், 'முந்தானை முடிச்சு' 'வைதேகி காத்திருந்தாள்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடைசியாக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த 'சதிலீலாவதி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கோவைத்தமிழ் பேசி ரசிகர்களை கவந்தார் கோவை சரளா. ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அவர், இன்றைக்கும் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மீண்டும் கதாநாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு காமெடி காட்சிக்கூட இருக்காது என்று கூறப்படுகிறது.
பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வரும் இப்படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.




