ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மைனா, கும்கி என இயற்கையின் பின்னணியில் படம் இயக்கிய பிரபுசாலமன் அடுத்து இயக்கி உள்ள படம் காடன். 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் தற்போதையை வாழ்வியல் தொடர்பானது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரபுசாலமன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு படத்திற்கும் நான் நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடும் ஒரு ஹீரோவை காட்ட விரும்பவில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல், காடுகள், நம்மை போலவே வாழும் உரிமை உள்ள விலங்குகள் இவற்றை பற்றி யார் பேசுவது. காடுகளில் யானையின் பங்கு மிகப்பெரியது. கும்கி எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் யானைகளின் நிலை என்ன என்பது குறித்து உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் காடன். இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இயற்கையை, சக உயிர்களை நேசிக்கிற அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.