த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி கொண்டிருக்கும் ஜீ தமிழ் டிவி, புதிய நிகழ்ச்சி மூலம் மற்றுமொரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. இசை ரியாலிடி நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதுமையான வடிவில் நிகழ்ச்சியை சேனல் அறிமுகப்படுத்த உள்ளது. 'சரிகமப' மற்றும் 'பேட்ட ராப்' ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தனது ரசிகர்களுக்காக 'ராக்ஸ்டார்' எனும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை வழங்க உள்ளது. ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டி தொலைக்காட்சிகளில் மார்ச் 28 தொடங்கி ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு 0730 முதல் 0930 வரை ஒளிபரப்பாகும். நேயர்கள் இந்த ஷோவை தங்கள் ஓய்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் ஜீ5-இல் கண்டு களிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் (டி.எஸ்.பி) தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக நடுவர் குழுவில் பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெறுவார்.
'ராக்ஸ்டார்' நிகழ்ச்சியிலுள்ள புதுமை என்னவெனில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஏற்கனவே பிரபலமான மற்றும் நன்கு அறிமுகமான இசை நட்சத்திரங்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் முதல் 'ராக்ஸ்டார்' பட்டத்துக்காக போட்டியிட்டு, வேறெந்த இசை ரியாலிடி நிகழ்ச்சியிலும இல்லாத ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்குவர்
கிகி மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்கியா, சத்தியன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்எஸ்கே ரம்யா, சின்னப் பொண்ணு, வினைதா, ஐஸ்வர்யா சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். பல்வேறு சுற்றுகளுடன் நடைபெறும் கடுமையான போட்டியில் பங்கேற்கும் இசை நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்வதுடன், பிரபல மற்றும் திறமையான கலைஞர்களுள் வெற்றி வாகை சூடப் போகும் மிகச் சிறந்தவர் யார் என்பதையும் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்கள் அனைவரும் தொலைக்காட்சியைப் பார்த்து போட்டியாளர்கள் மேடையில் தங்களின் இசை மூலம் ரசிகர்களைச் சுண்டியிழுக்கையில், பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் (போட்டியின் 2ஆவது வாரம் தொடங்கி) மிஸ்ட் கால் மூலம் வாக்களித்து ஆதரவு தெரிவிப்பார்கள். வாக்களிக்கும் முறை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளருக்கான பிரத்யேக எண்களுக்கு மிஸ்ட் கால் தருவதன் மூலம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறுகையில், ''இசை தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு பல முறை அழைப்பு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒத்துக் கொள்ள முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் உள்ள கான்செப்ட் தான். பல இசைப்பிரபலங்களும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கின்றனர். அதோடு எண்ணற்ற திறமைகளை இருந்தும் அவர்கள் அதை வெளிப்படுத்த சரியான மேடை இல்லாமல் இருக்கும். இந்த மேடை அவர்களுக்கான வாய்ப்பாக நிச்சயம் இருக்கும். இக்கலைஞர்களுக்கு வித்தியாசமான சுற்றுகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்னும் பல புதிய உயரங்களுக்குச் செல்லும் ஒருவரைக் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதனால் தான் இந்த பங்கேற்க சம்மதித்தேன்'' என்றார்.