ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாட்டுப்புற மற்றும் சினிமா பின்னணி பாடகியான ரமணி அம்மாள்(63) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம் பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். போதிய வாய்ப்பு இல்லாததால் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த இவர் 2017ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ச ரி க ம ப சீனியர்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரலாமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் "ராக்ஸ்டார்" ரமணி அம்மாளாக வலம் வந்த இவர் ‛ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார். மேலும் பல வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடி உள்ளார்.
ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.