சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, அவருடைய முதல் தெலுங்குப் பட கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிந்தனர்.
பிரிவுக்குப் பின்னரும் சில தெலுங்கு ஊடகங்கள் அவர்களைப் பற்றிய வதந்திகள், பொய்ச் செய்திகள் ஆகியவற்றை பரப்பி வருகின்றன. ஒரு இணையதளம் ஒன்று சமந்தா சொன்னதாகச் சொல்லி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் சோபிதா துலிபலாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி, “யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை,” என சமந்தா சொன்னதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியைப் பகிர்ந்து, “ நான் எப்போதும் அப்படி சொன்னதில்லை,” என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமந்தாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், ரிடுவீட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.