என்னை முதலில் ஆடிசன் செய்தது மம்முட்டி தான் ; மாளவிகா மோகனன் | மஞ்சு வாரியர் பட இயக்குனர் மும்பை விமான நிலையத்தில் கைது | அடுத்தடுத்து வெளியாகும் ‛இட்லி கடை' பட நடிகர்களின் கேரக்டர் போஸ்டர் : செப்., 14ல் இசை வெளியீடு | காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழக தியேட்டர் உரிமம் இத்தனை கோடியா? | தனுஷ் முதுகில் குத்த விரும்பாத ஜி.வி.பிரகாஷ் | 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்! | கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் ரசிகர்கள்: தேஜூ அஸ்வினி | 'குட் பேட் அக்லி - ஓடிடி தளத்தில் இன்னும் நீக்கப்படாத இளையராஜா பாடல்கள் | 200 கோடியை நெருங்கும் 'லோகா' | தனுசின் அடுத்த பட இயக்குனர்: தெலுங்கில் கவனம் செலுத்தும் ரகசியம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, அவருடைய முதல் தெலுங்குப் பட கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் பின்னர் பிரிந்தனர்.
பிரிவுக்குப் பின்னரும் சில தெலுங்கு ஊடகங்கள் அவர்களைப் பற்றிய வதந்திகள், பொய்ச் செய்திகள் ஆகியவற்றை பரப்பி வருகின்றன. ஒரு இணையதளம் ஒன்று சமந்தா சொன்னதாகச் சொல்லி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் சோபிதா துலிபலாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி, “யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை,” என சமந்தா சொன்னதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியைப் பகிர்ந்து, “ நான் எப்போதும் அப்படி சொன்னதில்லை,” என சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமந்தாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், ரிடுவீட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.