காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
கடந்த 25 வருடங்களுக்கு முன், மலையாளத்தில் 'டாடி' மற்றும் 'தேவராகம்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், 'ஓட்டு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக தயாராக இருக்கிறது.
இந்த படத்தை பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், இந்தப்படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் கோவாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.