'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கடந்த 25 வருடங்களுக்கு முன், மலையாளத்தில் 'டாடி' மற்றும் 'தேவராகம்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், 'ஓட்டு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக தயாராக இருக்கிறது.
இந்த படத்தை பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், இந்தப்படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் கோவாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.




