மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தில் த்ரிஷ்யம்-2 வெற்றி பெற்ற கையோடு, தெலுங்கிலும் அதன் ரீமேக்கை துவங்கிவிட்டார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது தேர்தல் களத்தில் பிஸியாகி விட்டதால், இந்தமுறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், மீனா, நதியா, எஸ்தர் அனில் என முதல் பாகத்தில் இருந்தவர்கள் அப்படியே இதிலும் தொடர்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில், படம் முழுதும் வருகின்ற, மலையாளத்தில் முரளிகோபி என்பவர் நடித்திருந்த, ஸ்ட்ரிக்ட்டான ஐஜி கதாபாத்திரத்தில், நடிகர் ராணா நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில், வில்லன் நடிகர் சம்பத் நடித்து வருகிறார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சம்பத், தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.