பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாளத்தில் த்ரிஷ்யம்-2 வெற்றி பெற்ற கையோடு, தெலுங்கிலும் அதன் ரீமேக்கை துவங்கிவிட்டார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது தேர்தல் களத்தில் பிஸியாகி விட்டதால், இந்தமுறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், மீனா, நதியா, எஸ்தர் அனில் என முதல் பாகத்தில் இருந்தவர்கள் அப்படியே இதிலும் தொடர்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில், படம் முழுதும் வருகின்ற, மலையாளத்தில் முரளிகோபி என்பவர் நடித்திருந்த, ஸ்ட்ரிக்ட்டான ஐஜி கதாபாத்திரத்தில், நடிகர் ராணா நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில், வில்லன் நடிகர் சம்பத் நடித்து வருகிறார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சம்பத், தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.