லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

மலையாளத்தில் த்ரிஷ்யம்-2 வெற்றி பெற்ற கையோடு, தெலுங்கிலும் அதன் ரீமேக்கை துவங்கிவிட்டார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது தேர்தல் களத்தில் பிஸியாகி விட்டதால், இந்தமுறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், மீனா, நதியா, எஸ்தர் அனில் என முதல் பாகத்தில் இருந்தவர்கள் அப்படியே இதிலும் தொடர்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில், படம் முழுதும் வருகின்ற, மலையாளத்தில் முரளிகோபி என்பவர் நடித்திருந்த, ஸ்ட்ரிக்ட்டான ஐஜி கதாபாத்திரத்தில், நடிகர் ராணா நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில், வில்லன் நடிகர் சம்பத் நடித்து வருகிறார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சம்பத், தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.