எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்று கலந்து கொண்ட விஷால் ஒரே ஒரு நாள் மட்டும் கலந்து கொண்டுவிட்டு அதன் பிறகு மூன்று நாட்கள் வரை எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரை மொபைல் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
மூன்று நாட்கள் கழித்து வந்தவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போதும் இதே போல்தான் சொல்லாமல் கொள்ளாமல் சில நாட்கள் எங்கோ காணாமல் போய்விட்டார். விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்தான். அவரே இப்படி நடந்து கொள்வது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விஷால் நடித்து வெளிவந்த 'சக்ரா' படம் இன்று 25 நாளைத் தொட்டாலும் இந்தப் படத்தால் விஷாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நம்பியிருக்கும் ஒரே படமான 'எனிமி' படத்திற்கும் அவரே எனிமி ஆகாமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.