மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"ஆண்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், வீட்டில் முடங்கி கிடக்கிறேன்; எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என, கவர்ச்சி நடிகை சோனா, சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சோனா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமா படங்களில், கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வார பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஆண்களை பற்றி, அவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முற்றுகை : இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள், தேனாம்பேட்டையில் சோனா நடத்தி வரும், பர்னிச்சர் கடை முன், முற்றுகை போராட்டம் நடத்தினர். "ஆண்கள் மத்தியில், சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் செல்லும் இடமெல்லாம் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம் என, அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
சோனா மறுப்பு : இதற்கிடையில், "ஆண்கள் மனம் புண்படும் படிகருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பேட்டி எடுத்த நிருபர் ,தவறாக சித்தரித்து எழுதிவிட்டார். அதற்காக, அந்த நிருபர்,மன்னிப்பும் கோரினார் என, சோனா தெரிவித்து வருகிறார். கோர்ட்டில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்த சோனா, கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஸ் தாஸிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன் விபரம்: காதல் தோல்வியால், திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறேன்; எனது தனிப்பட்ட விருப்பத்தில், யாரும் தலையிட முடியாது. அதற்காக, ஆண்களை பற்றி தவறாக நினைப்பது இல்லை. அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஆண்களை செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டு, டிஷ்யூ பேப்பர் போல் தூக்கி வீசிவிடுவேன் என, நான் தெரிவிக்கவே இல்லை. சொல்லாத கருத்துக்கு, நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். பேட்டி வெளிவந்த நாளில் இருந்து, அலுவலகம், வீடு என, அத்தனை இடங்களையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால், நான் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறேன். எனக்கு, அலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். தக்க பாதுகாப்பு கோரி, போலீசில் புகார் கொடுத்துள்ளேன். மிரட்டல் விடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளேன். இவ்வாறு சோனா தெரிவித்தார். நடிகை சோனா கொடுத்த புகார் மனு, விசாரணைக்காக, தி.நகர் துணை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.