ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 5 கோடி வரை என்கிறது கோலிவுட் வட்டாரம். மற்ற நடிகைகள் அவருடைய சம்பளத்தில் பாதி வரை தொட்டாலே அதிகம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர். அதன்பின் இங்கு நடிக்க வரவேயில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மேலும் பிரபலமாகலாம்.
அதோடு, பூஜாவிற்கு தெலுங்கு, ஹிந்தியிலும் மார்க்கெட் உள்ளதால் அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பூஜா மீண்டும் தமிழுக்கு வந்தால் நயன்தாராவுக்குப் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.