ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 5 கோடி வரை என்கிறது கோலிவுட் வட்டாரம். மற்ற நடிகைகள் அவருடைய சம்பளத்தில் பாதி வரை தொட்டாலே அதிகம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர். அதன்பின் இங்கு நடிக்க வரவேயில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மேலும் பிரபலமாகலாம்.
அதோடு, பூஜாவிற்கு தெலுங்கு, ஹிந்தியிலும் மார்க்கெட் உள்ளதால் அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பூஜா மீண்டும் தமிழுக்கு வந்தால் நயன்தாராவுக்குப் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.