அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 5 கோடி வரை என்கிறது கோலிவுட் வட்டாரம். மற்ற நடிகைகள் அவருடைய சம்பளத்தில் பாதி வரை தொட்டாலே அதிகம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர். அதன்பின் இங்கு நடிக்க வரவேயில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மேலும் பிரபலமாகலாம்.
அதோடு, பூஜாவிற்கு தெலுங்கு, ஹிந்தியிலும் மார்க்கெட் உள்ளதால் அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பூஜா மீண்டும் தமிழுக்கு வந்தால் நயன்தாராவுக்குப் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.