திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் மீனா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு, தெலுங்கிலும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-2 படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி முதல் பாகத்தை போன்றே வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பு சுடச்சுட ஆரம்பித்து விட்டது. இந்தமுறை ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் மலையாளத்தில் படம் முழுதும் வரும் புதிய ஐஜி கதாபாத்திரத்தில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் ராணாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் ராணா ஒப்புக்கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.