ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் |
மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராக இருந்தவர். பின்னர் புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தார். இந்தநிலையில், சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவை சரத்குமார், சீமான் ஆகியோர் சந்தித்ததை அடுத்து டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சந்தித்தனர். அதையடுத்து தற்போது நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சுதாகரன் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என்று தெரிவித்த பிரபு, பாஜகவில் இணைந்துள்ள தனது அண்ணன் ராம்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதோடு நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. சசிகலாவை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரபு.