'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
தமிழில் “ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்', தெலுங்கில் 'ஏ மாய சேசவே, ரேஸ் குர்ரம், கிக் 2, ப்ரூஸ் லீ' கன்னடத்தில் 'ஜாக்குவார்', மலையாளத்தில் 'கலெக்டர், வில்லன்' ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
தற்போது தமிழில் 'துருவ நட்சத்திரம், துக்ளக் தர்பார்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'ராதே ஷ்யாம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்யப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மனோஜ்.
“மாநிலத்தில் அனைவராலும் நேசிக்கப்படும், விரைவில் இந்தியா முழுவதும் நேசிக்கப்பட உள்ள அற்புதமான மனிதருடன் மீண்டும் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்கப் போவது மகிழ்ச்சி. 'நண்பன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். 'தளபதி 65' ஒரு பான் இந்தியா படமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.