கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
தமிழில் “ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்', தெலுங்கில் 'ஏ மாய சேசவே, ரேஸ் குர்ரம், கிக் 2, ப்ரூஸ் லீ' கன்னடத்தில் 'ஜாக்குவார்', மலையாளத்தில் 'கலெக்டர், வில்லன்' ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
தற்போது தமிழில் 'துருவ நட்சத்திரம், துக்ளக் தர்பார்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'ராதே ஷ்யாம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்யப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மனோஜ்.
“மாநிலத்தில் அனைவராலும் நேசிக்கப்படும், விரைவில் இந்தியா முழுவதும் நேசிக்கப்பட உள்ள அற்புதமான மனிதருடன் மீண்டும் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்கப் போவது மகிழ்ச்சி. 'நண்பன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். 'தளபதி 65' ஒரு பான் இந்தியா படமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.